Tuesday, September 28, 2010

பள்ளி வாழ்க்கை...!

நந்தவனத்தேரில்
ஒரே நாரில் தொடுத்தமலர்களாய்
நாமிருந்த நாட்கள்....
நகர்ந்தது அதுவே
நாழிகையில் தொடங்கி - பல
நாட்களாகி இன்று அதுவே
மாதங்கலென உருப்பொற்றுவிட்டது
இந்த நிலையில் அந்த இனிய நாட்களை
மீட்டபடி அஸ்தமனதிலும்
உதயத்தை கானுகின்றேன்..!
சந்திப்புகளைப்போலவே
பிரிவுகளும் தற்காலிகமானவை
நினைவுகளே நிரந்தரமானவை!

நெஞ்சிருக்கும் வரை..!

எண்ணத்தில் நிறைந்த காதலியும் நீயே
என் மனக்கண்களில் தெரியும்
உருவமும் நீயே
என்னுள்ளத்தல் பிரகாசிக்கும்
திங்களும் நீயே
உன்னை தங்கத்தில் படைத்தானோ இறைவன்
உன் நெஞ்சத்தில் என்னை
குடி கொள்ள வைத்தானே அந்த இறைவன்
அருகினில் இருந்து அன்றில்கள்
போல வாழ்ந்ததும் இல்லை
பிரிவினில் இருந்தும்
உறவினை வளர்த்து
உயிர் பெறச்சொய்வோம்
நம் காதலை நெஞ்சிருக்கும் வரை
உன்னை மட்டும் புஜித்துக்கொண்டு
உன்னுடன் வாழ்த்திடுவேன் கண்னே...!

மனதை அடைந்து விடு

ஒரே நேரத்தில் நினைப்பதை விட
உன் ஆயுள் முடியும் வரை
ஒருவரை நினைத்திருப்பது மேல்
அழகைப்பார்த்து மயங்கி விடாதே
அதில் ஆபத்து நிறைந்திருக்கும்
மனமுள்ளவனை மனதுக்குள் நினைத்திரு
மற்றவை மண்துாசிபோன்றது
மௌனம் காக்காதே மரணித்துவிடுவாய்
கேள்வியின் நாயகியே
மணம் உள்ள மலரை
தலையில் சூடிக்கொள்
அது மரணிக்கும் வரையிலும்
மணந்துகொண்டே இருக்கும்!

இதையே அடைந்து கொள்....!

அன்பான தோழியே
நீ காதலிக்கு இருவரில்
மணம் வீசும் மல்லிகையே
உனக்கு பொருத்தம்...!
ஏன் தெரியுமா.. அழகானவரை விட
மனங்கொண்டவரே சிறந்தவர்.
அழகானவரை விட்டுவிட்டு
மனம் உள்ளவரை மனந்துகொள்
மனம் வீசும் மல்லிகையே
உன் தலையில் சூடிக்கொள்
தோழியே இதையே அடைந்து கொள்
நீ வாழ்க்கையின் வசந்தத்தின்
எல்லைக்கே சென்று விடுவாய்....!

Sunday, September 26, 2010

நினைவுகள்....!

உள்ளத்தில் ஊற்றெடுத்த பாசமலரே
உன் கனிந்த முகத்தை
பார்க்க மனம் துடிக்குதடி
உன் பெயரை உச்சரித்தால்
உள்ளமெல்லாம் மகிழுதடி
உடல் மட்டும் உன்னை விட்டு பிரிந்தாலும்
உன் நினைவு
என்னை விட்டு என்றும் நீங்காது!

Tuesday, August 3, 2010

இதயத்தின் கீறல்கள்

வானமே நீயும் ஏனோ அழுகிறாய்
என் வாழ்வுதான் அவள்தந்த காதல்
காயங்களால் அழுதுவடிக்கிறது
உன்னையும் எந்தக்காதலி ஏமாற்றினால்
விரைந்து வா நீயும் நானும்
சேர்ந்தாவது இரவானால்
என் துாக்கத்தை துாரமாக்கியவளை
தேடிச்சென்று காதல் என்ற துாய்மையை
புரிய வைத்திடுவோம்!
என்னவளின் நினைவுகள்
தலையணையை ஈரமாக்குகின்றது
காதல்வேண்டும் என்றுதான் சொன்னது இதயம்
ஆனாலும் காதல் காயங்களை
ஏற்க்க முடியவில்லையே..!
பார்வைக்குள் தீ மூட்டினாய் அன்று
அதனால் இன்று
என் உருவத்தைக்கூட
நான் பார்க்கமுடியாத
ஊனப்பிறயைப்போல எனை ஆக்கிவிட்டாயே..!

Sunday, August 1, 2010

உன் மடல் எனக்கோர் சொர்க்கம்

இடிபட்ட இதயத்துக்கோர்
இரத்தம் உன்மடல்
புன்பட்ட இந்த பு வாழ்வதற்கோர்
புத்துணர்ச்சி தருவது உன்மடல்
வேதனைகளால் வெந்துபோன
எனக்கோர் ஆறுதல் உன்மடல்
சோகம் என்றநோயினால்
துடிக்கும் எனக்கோர் மருத்துவம் உன்மடல்
மொத்தத்தில்
என் உயிர்
என் உடல்
என் சுவாசம்
எல்லாமே உன்மடல்தான்...!