என் உணர்வில் என்றென்றும்
உன் நினைவே
என் உயிரில் என்றென்றும்
உன் உருவமே
என் விழிகளில் என்றென்றும்
உன் முகமே
என் உச்சரிப்பில் என்றென்றும்
உன் குரலே
என் மூச்சில் என்றென்றும்
உன் சுவாசமே
எத்தனை ஆயிரம் உறவுகள்
என்னுடனிருந்தும்
என் உயிர் தேடும்
ஒரே உறவாக
உன்னை மட்டுமே காண்கிறேன்
நான் என்றும் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னை நினைபதற்க்காக மட்டுமே
நான் இன்றும் இருக்கிறேன்
இல்லை என்றால்
என்றோ இறந்திருப்பேன்...!
Wednesday, April 28, 2010
Sunday, April 25, 2010
Saturday, April 24, 2010
Friday, April 23, 2010
நீ வேண்டும்...!
இரவு நேரத்து பவுர்ணமி போல்
இதய தேசத்தில் நுழைந்தவளே...
ஒற்றை அன்றில் பறவை என்னை
உறவு கொடுத்து முழுமைபடுத்தியவளே...
வேஷங்கள் நிறைந்த இவ்வுலகில் எனக்கு
வெளிச்ச புள்ளியாய் வந்தவளே.
குழந்தையாய் மாறும் கடைசி காலங்களிலும்
கூடி நீ என்னோடு தவழ வேண்டும்
உன் வாய் ஒழுகும் சிறு உணவெடுத்து
உன்னோடு உண்டு நான் மகிழவேண்டும்...
இருப்பதெல்லாம் ஒன்றும் வேண்டாம்
இல்லையென்ற உன் அன்பு வேண்டும்.
என் வாழ்க்கை முடியும் வரை
என்னில் பாதியாய் இல்லை
எனக்குள் முழுமையாகவே நீ வேண்டும்...!
இதய தேசத்தில் நுழைந்தவளே...
ஒற்றை அன்றில் பறவை என்னை
உறவு கொடுத்து முழுமைபடுத்தியவளே...
வேஷங்கள் நிறைந்த இவ்வுலகில் எனக்கு
வெளிச்ச புள்ளியாய் வந்தவளே.
குழந்தையாய் மாறும் கடைசி காலங்களிலும்
கூடி நீ என்னோடு தவழ வேண்டும்
உன் வாய் ஒழுகும் சிறு உணவெடுத்து
உன்னோடு உண்டு நான் மகிழவேண்டும்...
இருப்பதெல்லாம் ஒன்றும் வேண்டாம்
இல்லையென்ற உன் அன்பு வேண்டும்.
என் வாழ்க்கை முடியும் வரை
என்னில் பாதியாய் இல்லை
எனக்குள் முழுமையாகவே நீ வேண்டும்...!
குளிர்........!
குளிர்........!
அது என்ன செய்து விடப் போகிறது..?
சுடுவதாக ஒரு போதும்
அது பொய் பேசியதில்லையே!
கதகதப்பாய்
தழுவுவதாகச் சொல்லி
யாரையும் ஏமாற்றியதுமில்லையே!
குளிர்......!
அது என்ன செய்து விடப் போகிறது..?
அது என்ன செய்து விடப் போகிறது..?
சுடுவதாக ஒரு போதும்
அது பொய் பேசியதில்லையே!
கதகதப்பாய்
தழுவுவதாகச் சொல்லி
யாரையும் ஏமாற்றியதுமில்லையே!
குளிர்......!
அது என்ன செய்து விடப் போகிறது..?
காதல்.....SA
வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!
Thursday, April 22, 2010
மனித மனம்.....
மலருக்கு கோபம் வண்டுகள்
மலர்விட்டு மலர்தாவுகின்றனயென்று
வானத்துக்கு கோபம் மேகங்கள்
இடம் விட்டு இடம் மாறுகின்றனயென்று
ஆரறிவு படைத்த மனிதனே
மனம்விட்டு மனம் மாறுகையில்
பாவம்
மலர்களும் மேகம்களும்
என்னதான் செய்ய முடியும்...!
மலர்விட்டு மலர்தாவுகின்றனயென்று
வானத்துக்கு கோபம் மேகங்கள்
இடம் விட்டு இடம் மாறுகின்றனயென்று
ஆரறிவு படைத்த மனிதனே
மனம்விட்டு மனம் மாறுகையில்
பாவம்
மலர்களும் மேகம்களும்
என்னதான் செய்ய முடியும்...!
நினைவின் வலிகள்......sa
நினைவின் வலிகள்
நெஞ்சை கசக்க
நிழலின் நிறங்கள் தீயாய் ஒளிக்க
மனதின் விழிகள் கலங்கி தவிக்க
முடியுமோ உயிரே உன்னை மறக்க
நெஞ்சை கசக்க
நிழலின் நிறங்கள் தீயாய் ஒளிக்க
மனதின் விழிகள் கலங்கி தவிக்க
முடியுமோ உயிரே உன்னை மறக்க
உன் மூண்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.....SA
என்னவளே....
உன்னைக்கண்;ட நாளாய்
என்னாவி என்னில் இல்லையடி
உன் மூவெழுத்து நாமத்தில்
என் மூச்சுள்ளதென நானறிய
எத்தனை நாள்
நான் காத்திருக்கவேண்டும்
உன்னை ஓர் நிமிடம் காணாத
என் கண்களையே நான்
வெறுக்கின்றேன்
என்னைப்பார்த்து நீ சிரிக்கையிலே
ஒருகோடி இன்பமாய் நினைக்கிறேன
ஒருகனம் நீ என்னை
முந்திச்செல்லும் போது
என்னையே நான் இழக்கிறேன்
என்னவளே...
உன் புன்னகை மட்டும் போதும்
நான் பலகாலம் வாழ்ந்திடுவேன்
இவ்வையகத்தில் - அன்பே
நீ என்னுடைய முற்றத்தில் பூத்த
முதல் ரோஜாச்செடி
ஆதலால்தான் தினமும்
ஆனந்த கண்ணீராய்-தண்ணீர்
விடுகிறேன்-வாடாமலராய் நீ
தரிசனம் தருவாயா.....SA
உன்னைக்கண்;ட நாளாய்
என்னாவி என்னில் இல்லையடி
உன் மூவெழுத்து நாமத்தில்
என் மூச்சுள்ளதென நானறிய
எத்தனை நாள்
நான் காத்திருக்கவேண்டும்
உன்னை ஓர் நிமிடம் காணாத
என் கண்களையே நான்
வெறுக்கின்றேன்
என்னைப்பார்த்து நீ சிரிக்கையிலே
ஒருகோடி இன்பமாய் நினைக்கிறேன
ஒருகனம் நீ என்னை
முந்திச்செல்லும் போது
என்னையே நான் இழக்கிறேன்
என்னவளே...
உன் புன்னகை மட்டும் போதும்
நான் பலகாலம் வாழ்ந்திடுவேன்
இவ்வையகத்தில் - அன்பே
நீ என்னுடைய முற்றத்தில் பூத்த
முதல் ரோஜாச்செடி
ஆதலால்தான் தினமும்
ஆனந்த கண்ணீராய்-தண்ணீர்
விடுகிறேன்-வாடாமலராய் நீ
தரிசனம் தருவாயா.....SA
Tuesday, April 20, 2010
Monday, April 19, 2010
அழகு...
பூக்களின் அழகு உதிரும்வரை
பௌர்ணமியின் அழகு விடியும் வரை
சிலையின் அழகு உடையும் வரை
மழலையின் அழகு இளமை வரை
பாடலின் அழகு இனிமை வரை
பெண்மையின் அழகு தாய்மை வரை
உடலின் அழகு உயிர் பிரியும் வரை
அன்பின் அழகு இறுதி வரை
பௌர்ணமியின் அழகு விடியும் வரை
சிலையின் அழகு உடையும் வரை
மழலையின் அழகு இளமை வரை
பாடலின் அழகு இனிமை வரை
பெண்மையின் அழகு தாய்மை வரை
உடலின் அழகு உயிர் பிரியும் வரை
அன்பின் அழகு இறுதி வரை
Subscribe to:
Posts (Atom)