வானமே நீயும் ஏனோ அழுகிறாய்
என் வாழ்வுதான் அவள்தந்த காதல்
காயங்களால் அழுதுவடிக்கிறது
உன்னையும் எந்தக்காதலி ஏமாற்றினால்
விரைந்து வா நீயும் நானும்
சேர்ந்தாவது இரவானால்
என் துாக்கத்தை துாரமாக்கியவளை
தேடிச்சென்று காதல் என்ற துாய்மையை
புரிய வைத்திடுவோம்!
என்னவளின் நினைவுகள்
தலையணையை ஈரமாக்குகின்றது
காதல்வேண்டும் என்றுதான் சொன்னது இதயம்
ஆனாலும் காதல் காயங்களை
ஏற்க்க முடியவில்லையே..!
பார்வைக்குள் தீ மூட்டினாய் அன்று
அதனால் இன்று
என் உருவத்தைக்கூட
நான் பார்க்கமுடியாத
ஊனப்பிறயைப்போல எனை ஆக்கிவிட்டாயே..!
Tuesday, August 3, 2010
Sunday, August 1, 2010
உன் மடல் எனக்கோர் சொர்க்கம்
இடிபட்ட இதயத்துக்கோர்
இரத்தம் உன்மடல்
புன்பட்ட இந்த பு வாழ்வதற்கோர்
புத்துணர்ச்சி தருவது உன்மடல்
வேதனைகளால் வெந்துபோன
எனக்கோர் ஆறுதல் உன்மடல்
சோகம் என்றநோயினால்
துடிக்கும் எனக்கோர் மருத்துவம் உன்மடல்
மொத்தத்தில்
என் உயிர்
என் உடல்
என் சுவாசம்
எல்லாமே உன்மடல்தான்...!
இரத்தம் உன்மடல்
புன்பட்ட இந்த பு வாழ்வதற்கோர்
புத்துணர்ச்சி தருவது உன்மடல்
வேதனைகளால் வெந்துபோன
எனக்கோர் ஆறுதல் உன்மடல்
சோகம் என்றநோயினால்
துடிக்கும் எனக்கோர் மருத்துவம் உன்மடல்
மொத்தத்தில்
என் உயிர்
என் உடல்
என் சுவாசம்
எல்லாமே உன்மடல்தான்...!
Subscribe to:
Posts (Atom)