நந்தவனத்தேரில் |
ஒரே நாரில் தொடுத்தமலர்களாய் |
நாமிருந்த நாட்கள்.... |
நகர்ந்தது அதுவே |
நாழிகையில் தொடங்கி - பல |
நாட்களாகி இன்று அதுவே |
மாதங்கலென உருப்பொற்றுவிட்டது |
இந்த நிலையில் அந்த இனிய நாட்களை |
மீட்டபடி அஸ்தமனதிலும் |
உதயத்தை கானுகின்றேன்..! |
சந்திப்புகளைப்போலவே |
பிரிவுகளும் தற்காலிகமானவை |
நினைவுகளே நிரந்தரமானவை! |
Tuesday, September 28, 2010
பள்ளி வாழ்க்கை...!
நெஞ்சிருக்கும் வரை..!
எண்ணத்தில் நிறைந்த காதலியும் நீயே |
என் மனக்கண்களில் தெரியும் |
உருவமும் நீயே |
என்னுள்ளத்தல் பிரகாசிக்கும் |
திங்களும் நீயே |
உன்னை தங்கத்தில் படைத்தானோ இறைவன் |
உன் நெஞ்சத்தில் என்னை |
குடி கொள்ள வைத்தானே அந்த இறைவன் |
அருகினில் இருந்து அன்றில்கள் |
போல வாழ்ந்ததும் இல்லை |
பிரிவினில் இருந்தும் |
உறவினை வளர்த்து |
உயிர் பெறச்சொய்வோம் |
நம் காதலை நெஞ்சிருக்கும் வரை |
உன்னை மட்டும் புஜித்துக்கொண்டு |
உன்னுடன் வாழ்த்திடுவேன் கண்னே...! |
மனதை அடைந்து விடு
ஒரே நேரத்தில் நினைப்பதை விட |
உன் ஆயுள் முடியும் வரை |
ஒருவரை நினைத்திருப்பது மேல் |
அழகைப்பார்த்து மயங்கி விடாதே |
அதில் ஆபத்து நிறைந்திருக்கும் |
மனமுள்ளவனை மனதுக்குள் நினைத்திரு |
மற்றவை மண்துாசிபோன்றது |
மௌனம் காக்காதே மரணித்துவிடுவாய் |
கேள்வியின் நாயகியே |
மணம் உள்ள மலரை |
தலையில் சூடிக்கொள் |
அது மரணிக்கும் வரையிலும் |
மணந்துகொண்டே இருக்கும்! |
இதையே அடைந்து கொள்....!
அன்பான தோழியே |
நீ காதலிக்கு இருவரில் |
மணம் வீசும் மல்லிகையே |
உனக்கு பொருத்தம்...! |
ஏன் தெரியுமா.. அழகானவரை விட |
மனங்கொண்டவரே சிறந்தவர். |
அழகானவரை விட்டுவிட்டு |
மனம் உள்ளவரை மனந்துகொள் |
மனம் வீசும் மல்லிகையே |
உன் தலையில் சூடிக்கொள் |
தோழியே இதையே அடைந்து கொள் |
நீ வாழ்க்கையின் வசந்தத்தின் |
எல்லைக்கே சென்று விடுவாய்....! |
Sunday, September 26, 2010
நினைவுகள்....!
உள்ளத்தில் ஊற்றெடுத்த பாசமலரே |
உன் கனிந்த முகத்தை |
பார்க்க மனம் துடிக்குதடி |
உன் பெயரை உச்சரித்தால் |
உள்ளமெல்லாம் மகிழுதடி |
உடல் மட்டும் உன்னை விட்டு பிரிந்தாலும் |
உன் நினைவு |
என்னை விட்டு என்றும் நீங்காது! |
Subscribe to:
Posts (Atom)